Thursday, December 30, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மலர்ந்திடும் புத்தாண்டு நம் மக்கள் அனைவரின் உள்ளத்திலும் அமைதியையும் , ஆனந்ததையும் கொடுக்கும் அன்பு மலராக இருக்கட்டும் ..  இணைய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். . !!! 

Wednesday, December 29, 2010

உன் கண்ணசைவில் !

நித்தம் என் பேனா மை தீர கவிதை எழுதி முடிக்கிறேன் ...
ஆனாலும் மறுநாள் ஒரு கவிதை காட்டி சிரிக்கிறாய் ... உன் கண்ணசைவில் !!!

Tuesday, December 28, 2010

கனமாகி போனது

விரல் சொடுக்கும் நேரத்தில் என் இதயம் கனமாகி போனது ... நீ விரல் சொடுக்கி சொன்ன ஒரு வார்த்தையில் ...!

மௌனம்

உன்னிடம் எனக்கு பிடித்ததே உன் மௌனம் தான் ... ஆனாலும் உதிரும் ஓர் இரு வார்த்தைக்காக உருக துடிக்குது மனம் !!! 

Saturday, December 25, 2010

நான் பயணிக்கிறேன்

தினமும் நான் பயணிக்கிறேன் ... ஆனால்


என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன் -  "தனியாக..."

Thursday, December 23, 2010

காதலுக்கு ஓரு காலம் இருந்தால் ...

காதலில் இறந்த காலம் என்று ஒன்று இருந்திருந்தால் அங்கே காதல் இறந்து இருக்கும்.
எதிர் காலம் என்று ஒன்று இருந்தால் அங்கே காதல் இனித்து இருக்கும்.
காதலில் நிகழ்காலம் மட்டும் என்றுமே புதிராய் இருக்கும்.

Tuesday, December 21, 2010

எது கடினம்

சந்தோசமாக இருப்பது சுலபம் ....
சந்தோசமாக இருக்க முயலுவது கடினம் ...


விவசாயி

நானும் ஓரு விவசாயி தான் . பூப்பது நீயானால் .. என் இதய நிலத்தை ஏற் பூட்டி உழ நான் தயார்.

அத்துணைக்கும் ஆசை படு :-)

புத்தருகே உலகில் உள்ள அத்துணை பேரும் ஆசையை விடவேண்டும் என்ற ஆசை ... இருந்தது அதனால் தான் சொல்கிறேன் அத்துணைக்கும் ஆசை படு :-)


கண்டேன் நல்ல கவிதையை

நல்ல கவிதை எழுத வேண்டும் என்றேன்,
காதலித்து தோற்றுப்பார் பார் என்றான் ஒருவன்.
கண்டேன் நல்ல கவிதையை,
காதலில் இல்லையடி கவிதை,
காலில் இருந்தும் கர்வம் கொண்ட உன் கால் "ஹய் ஹெல்சு செருபினிலும்"

அமெரிக்கா

concrete கூரைகள் கணகிட்ட வாழ்கை!!!இவை அத்துன்னையும் என்நாட்டின் கயிற்று கட்டிலின் உறக்கத்துக்கு ஈடாகுமா !!!




கனாவும் வினாவும்

கண்ட கனாகளுக்கு ... வினா தொடுத்து விடை தெரியாமல் நிற்பதே .. இந்த கணிணி பொறியாளன் ( software engineer ) வாழ்கை !!!

Saturday, January 30, 2010

வருத்த படுவது இல்லை

என் நினைவு நாளை விட
என் நினைவுகள் என்றும் உன் நினைவில் இறுக்கும் என்பதால்
வாழும் நாட்களை எண்ணி வருத்த படுவது இல்லை


Saturday, January 9, 2010

தேவையில்லை எதுவும் எனக்கு

சுவாசிக்க காற்றுதேவை இல்லை..
நேசிக்க நீ இருக்கும் போது...

நேசிக்க ஒரு தேசம் தேவையில்லை
நேசிக்க நீ இருக்கும் போது...

புசிக்க ஒரு உணவும் தேவையில்லை
உன் புன்னகை இருக்கும் போது...

பூஜிக்க ஒரு கடவுளும் தேவையில்லை
நீ என் பக்கம் இருக்கும் போது...

அடியே ! தேவையில்லை எதுவும் எனக்கு
நீயே என் தேவதையாய் இருக்கும் போது...