எண்ணம், சொல், செயல்மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டுமாம்.காதலிக்காத யாரோசொல்லிவிட்டுப்போய்விட்டார்.
காதலிக்கிறவனுக்கு தானேஅந்த அவஸ்தை புரியும்!
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றுதெரியாமலேக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.எந்தக் கணத்தில்உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்?எனக்குத் தெரியாது!
உன்னைக் காதலிக்கலாமாஎன்று நினைத்தபோது,காதலித்தால் உன்னைத்தான்காதலிக்க வேண்டும் என்றஎண்ணம் வந்தது எப்படி?எனக்குத் தெரியாது!
காதலைஎண்ணத்திலும்,செயலிலும் நான் வைத்தேன்!சொல்லில் மட்டும் நீ வையேன்!
ஆமாமடி!காதலை நீயே சொல்லிவிடேன்!!ப்ளீஸ்…
